search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் மோதல்"

    • பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது.

    விழுப்புரம்:

    மயிலம் கீழ்எடையாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவரது மனைவி செல்வமணி (வயது 50) பெரியதம்பி அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பெரியதம்பி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி செல்வமணியுடன் கீழ்எடையாலம் பகுதியில் இருந்து கூட்டேரிபட்டிற்கு கடைக்கு தேவையான பல சரக்கு வாங்குவதற்கு சென்றனர். 

    இதனை யடுத்து பலசரக்கு வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் கூட்டேரிபட்டி லிருந்து கீழ்எடையாலத்திற்கு வந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் வந்த போது பின்னால் வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கி ளிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெரியதம்பி, இவரது மனைவி செல்வமணியை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது 108 ஆம்புலன்சில் செல்லும் வழியிலே செல்வமணி பரிதாப மாக உயிர் இழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த பெரிய தம்பிக்கு முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன் மோதி முதியவர் பலியானார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கிருஷ்ணாபுரம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 62). இவர் தெற்குவெளிவீதி தவிட்டு சந்தை அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து ராமதாசின் மகன் அரவிந்தகுமார், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார், வேன் டிரைவர் மேல சக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அருண்குமார் (20) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி விவசாயி பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது49) இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு சொந்த வேலையாக சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திருவெண்ணைநல்லூர் ரோடு பாண்டூர் காலனி மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திருக்கோவிலூரில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற வேன் அய்யனார் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

    தகவலறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெ க்டர் தமிழ்வாணன் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20).
    • திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20). இவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.சில நாட்கள் முன்பு, கர்நாடக மாநிலம், உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.

    இவர் மட்டும், திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.நேற்று காலை நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு, பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த 'ஈச்சர்' சரக்கு வேன், பைக் மீது மோதியது.கீழே விழுந்த ஆரியான் மீது வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து, தலைநசுங்கி உயிரிழந்தார். சரக்கு வேன், 20 மீட்டர் தூரத்திற்கு பைக்கை இழுத்து சென்றது.

    திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.சம்பவத்தை தொடர்ந்து, குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப் படுத்த போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்துள்ளனர்.

    ×